என்னுரை
சீர்மிகு தமிழ்த்தாயின் சேவடிக்கு ஆர்வமுடன் யான் படைத்த அணிமலர்கள் பற்பலவாயினும் கற்பகமலர் மாலையன்ன கவிமலர்க் கோவையொன்றை அவள்தம் பொன்னடிகட்குச் சூட்ட யான் நெடுநாள் விழைந்து வந்தேன்.
அணிந்துரை
உ
முருகா
அருண்மொழி அரசு திருமுருக
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
சாற்றுக்கவி
நேரிசை வெண்பா
கன்னலோ! கற்கண்டோ! காதற் கனியமுதோ! எண்ணத்தித் திக்கும் இயலமைத்து – நன்னலமாய் பிள்ளைத் தமிழதனைப் பேசினான் பேகனிது கள்ளைப் பழிக்கும் கவி
புமியிலுயர் காரைநகர்ப் பொற்கோயில் மேவும் தமிழ்த்தாயின் பிள்ளைத் தமிழை – அமிழ்தம்போல் நந்தனனால் பேகனிதைத் தாரணியில் ஓதினோர் சந்ததமும் வாழ்வார் தழைத்து
ஞானத் தமிழ்த்தாயின் நற்பிள்ளைப் பாடலதை வானத் தமுதாய் வழங்கினார் – மோனத்தார் மெச்சும் புகழ்பேகன் மேதினியில் ஓதினார் உச்சியில் வைப்பார் உவந்து.