உடலுக்கு உடல் வேறுபடும் வாசனை, சொல்லிமாளாத் தனிமை மீது, ஓசையின்றி படர்வதை இச்சையென வகை பிரித்துவிடுவது வாசிக்கும் மனத்தை பொறுத்தவரைகூட ஓர் தனிமனித அபத்தம் தான். அடர்ந்த மௌனத்தைத் துளைப்பது மட்டுமே எழுதுபவன் தேவையில்லை. யாருக்கு இவற்றைச் சொல்லுகிறோம்? ஏன் சொல்லுகிறோம்? என்பது அதைவிட முக்கியம். இவன் கதைகளின் வழியே அடுத்த பதினைந்து ஆண்டுகளில் வளர்ந்து நிற்கப்போகிற இளையவர்களின் விரல் பற்றிக் கொள்கிறான். அவர்கள் இப்போது நம் வீடுகளில் குழந்தைகளாக நம் கண்முன்னே விளையாடித் திரிந்துகொண்டும், நம்மைக் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.